சுவிஸ்-இந்தியா அறிவியல், தொழில்நுட்ப துறையில் கூட்டுறவை வலுப்படுத்த ஒப்புதல்
சுவிட்சர்லாந்தும் இந்தியாவும் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதாக மீண்டும் உறுதியளித்துள்ளன. செப் 1 பெர்ன் நகரில் நடைபெற்ற 7-வது இந்தியா-சுவிட்சர்லாந்து இணை குழு கூட்டத்தில், இரு நாடுகளும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் கூட்டுறவை மேலும் வலுப்படுத்த உறுதியளித்துள்ளது.
இந்தக் கூட்டம் 2003-ல் கையெழுத்தான இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் நடைபெற்றது. இரு தரப்பும் தற்போதுள்ள ஆதரவு கருவிகளை சிறப்பாக பயன்படுத்துவது மேட்டரும் புதிய அணுகுமுறைகளை அறிமுகப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
அடுத்த கூட்டம் 2027-ல் இந்தியாவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்து பெங்களுருவில் Swissnex எனும் அலுவலகத்தை நடத்திவருகிறது. இது கல்வி ஆராய்ச்சி மற்றும் புதுமை துறைகளை இணைக்கும் பணியை செய்கிறது.

Swiss National Science Foundation மற்றும் இந்திய நிறுவனங்கள் இணைந்து 2016-ஆம் ஆண்டு முதல் 300-க்கும் மேற்பட்ட இருதரப்பு ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதியளித்துள்ளன.
Zurich University of Applied Science (ZHAW) தெற்காசியாவிற்கான முக்கிய அறிவியல் மையமாக செயல்படுகிறது. 1961-ஆம் ஆண்டு முதல் 370-க்கும் மேற்பட்ட Swiss Government Excellence Scholarship-கள் இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த கூட்டுறவு, இந்தியா-சுவிட்சர்லாந்து இடையேயான அறிவியல் மற்றும் கல்வி உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய கட்டமாக பார்க்கப்படுறது. இது இரு நாடுகளுக்கும் நீண்ட கால நன்மைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© PTI News