ரயில் நிலையத்தில் போலீசாரை தாக்கிய நபர் கைது
பேர்ன் கன்டோன் போலீசார் புதன்கிழமை பிரின்ஸ் (Brienz) ரயில் நிலையத்தில் ஒரு ஆணை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் போது, அவர் போலீசாரை தாக்கியதால் PepperSpray மற்றும் மின்சார அதிர்ச்சி கருவி (டேசர்) பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
போலீஸ் அறிக்கையின் படி, காலை 11.50 மணிக்கு முன்பு அந்த ஆண் பொதுமக்கள் முன்னிலையில் சத்தமாகக் கத்தி, “சந்தேகமான முறையில் நடந்து கொண்டார்” என புகார் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அவரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, அவர் ஆணைகளை மீறி தாக்குதல் நடத்தினார்.

அவர் ஒரு காவலரை முகத்தில் குத்தியதாகவும், நிலைமை மோசமடைந்ததால் ஒரு போலீசார் Pepper Spray பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும், தாக்குதல் தொடர்ந்ததால் இறுதியில் டேசர் கருவி பயன்படுத்தி அவர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டார்.
போலீசாரால் கைது செய்யப்பட்ட அந்த நபர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆரம்பக்கட்ட தகவல்களின் படி, அவர் உடல்நலக் காயமின்றி இருந்தார். பின்னர் அவர் ஒரு சிறப்பு பராமரிப்பு நிலையத்துக்கு மாற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
“போலீஸ் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக கட்டாயம் இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதாகியது” என்று பேர்ன் கன்டோன் போலீஸ் செய்திக்குறிப்பில் விளக்கியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
@Kapo BE