சுமார் 734 ஆண்டுகள் நீண்ட வரலாற்றைக் கொண்ட சுவிட்சர்லாந்து வரி விதிப்புகளுக்கு அஞ்சப் போவதில்லை என நாட்டின் ஜனாதிபதி கரின் கெல்லர் சுட்டர் தெரிவித்துள்ளார்.
கனடிய தேசிய தினத்தை முன்னிட்டு ரூட்லி மலைப்பகுதியில் ஆற்றிய உரையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். சுட்டர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை மறைமுகமாக கிண்டல் செய்தார்.
டிரம்பின் வரி (டாரிஃப்) கொள்கைகளைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, “சுவிட்சர்லாந்து 1291-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. இது ஒரு புதிய வரி அல்ல,” என்று கூறி, டிரம்பின் தன்னிச்சையான வரி விதிப்புகளை சுட்டிக்காட்டினார். இந்த கிண்டலுக்கு கூடியிருந்தவர்கள் புன்னகையுடன் எதிர்வினையாற்றினர்.
நாம் சுதந்திரமாக செயல்படக்கூடிய இடங்களில் செயல்பட வேண்டும். நாம் நம்பகமானவர்கள் என்று உறுதியாகக் கூறலாம். சுவிட்சர்லாந்து வாக்கு கொடுத்தால், அதை நிறைவேற்றும் என தெரிவித்துள்ளார்.

இந்த நம்பகத்தன்மை, குறிப்பாக இந்த காலகட்டத்தில், நமது நாட்டின் மிகப்பெரிய பலமாக உள்ளது. “நமது வரலாறு, சாதனைகள் மற்றும் பகிரப்பட்ட தாய்நாட்டை நாம் பெருமையுடன் பார்க்கலாம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தனிப்பட்ட பொறுப்பு என்ற கொள்கை நமது நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது. “முடிவெடுப்பதும் பொறுப்பு ஏற்பதும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இது நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் பொருந்தும்,” என கெல்லர்-சுட்டர் கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையும் பயமும் அதிகரித்து வருகின்றன. இருப்பினும், “இந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள சுவிட்சர்லாந்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளை விட சிறந்த நிலைமைகள் உள்ளன என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.