சுவிஸ் ஏர்லைன்ஸ் தெல் அவிவ் இடையேயான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பம்
செப்டம்பர் 29 முதல், தேசிய விமான நிறுவனமான சுவிஸ் ஏர்லைன்ஸ் சூரிச் மற்றும் இஸ்ரேல் தலைநகரமான தெல் அவிவ் இடையே விமான சேவைகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது.
முதலில், பிராந்தியத்தில் நிலவும் “பாதுகாப்பற்ற மற்றும் கணிக்க முடியாத” சூழ்நிலை காரணமாக, சுவிஸ் ஏர்லைன்ஸ் தெல் அவிவ் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்களை அக்டோபர் 25 வரை நிறுத்தி வைத்திருந்தது.

எனினும், தற்போது “சூழ்நிலையின் மறு மதிப்பீடு” மூலம் விமான போக்குவரத்தை முன்கூட்டியே மீண்டும் தொடங்க முடியும் என தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், கூட்டாட்சி வெளியுறவுத்துறை (FDFA) “நாடு முழுவதும் வன்முறைச் செயல்களின் அதிக ஆபத்து” காரணமாக இஸ்ரேலுக்கு பயணிக்க வேண்டாம் என பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ள போதிலும், சுவிஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.
அவசர காரணங்களுக்காக இஸ்ரேலுக்கு பயணிக்க வேண்டியவர்கள், எந்தவிதமான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்களையும் தவிர்க்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
@KeystoneSDA