ஜெனீவாவில் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் தவிக்கும் மக்கள்.!!
ஜெனீவா நகரத்தில் உள்ள பிரபலமான Bertrand மற்றும் La Grange பூங்காக்களில் உள்ள சிறுவர் குளங்களை (paddling pools) தரமுயர்த்தும் பணிகள் தற்போது மக்களிடம் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது நகரம் கடும் வெப்ப அலைக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், இந்த திருத்தப்பணிகள் இன்னும் முடிக்கப்படாதது பொதுமக்கள், குறிப்பாக குடும்பங்களுடன் இருக்கும் உள்ளூர் வாசிகளை பெரிதும் பாதித்துள்ளது.
இந்த குளங்கள் சிறுவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு வெப்பத்தில் சிறந்த ஓய்விடமாக இருந்தாலும், இந்த ஆண்டு வசந்த காலத்தில்வே (spring) நகரம் அதனை முன்பணம் ஒதுக்கி திருத்தும் பணிகளை தொடங்கியது. ஆனால் மழைக்காலத்தின் நீடித்த வானிலை மற்றும் நகர சபையின் தாமதமான அனுமதி, வேலைகளை தாமதப்படுத்தியதாக நகர நிர்வாகம் விளக்கம் அளிக்கிறது.
இருப்பினும், மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு நல்ல செய்தி இருக்கிறது. Bertrand பூங்கா குளம் வரும் வாரத்திற்குள் திறக்கப்படும் என்றும், La Grange பூங்கா குளம் மாத இறுதிக்குள் பயன்படுத்தத்தக்க நிலையில் இருக்கும் என்றும் நகரம் அறிவித்துள்ளது.

உள்ளூர் மக்கள் தெரிவிப்பதாவது: “நாங்கள் குழந்தைகளுடன் வெளியே வருவதற்கு கூட இடமில்லை. கடும் வெப்பத்தில் இந்த குளங்களை வேகமாக திறப்பது அவசியமாக இருந்தது” என தெரிவிக்கின்றனர்.
நகர மக்கள் எதிர்பார்ப்பது ஒன்றே – நகர நிர்வாகம் எதிர்காலத்தில் இத்தகைய முக்கிய அம்சங்களை சீராக திட்டமிட்டு, மக்களுடைய தேவையை விசாரணை செய்து, வேலைகளை காலத்துக்கேற்ப முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே.
ஜெனீவாவின் வெப்பத்தையும், நகர பசுமை பகுதிகளின் பயன்பாடையும் மனதில் வைத்து, மக்கள் வசதிக்காக கட்டமைக்கப்பட்ட இந்த குளங்கள் விரைவில் திறக்கப்படும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.