துர்காவ் கன்டோன் இல் பிக்பாக்கெட் திருட்டு மற்றும் வழிப்பறி அதிகரிப்பு
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, (Frauenfeld) ஃபிராவென்ஃபெல்டில் சுமார் 25 பிக்பாக்கெட் மற்றும் மோசடி திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. துர்காவ் கன்டோனல் காவல்துறை இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.
### குற்றவாளிகள் அதிநவீன ஏமாற்று வேலைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
குறிப்பாக குற்றவாளிகள் இவ்வாறான திருட்டுகளில் ஈடுபடுவதற்கு ஏமாற்று தந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஒபொதுவாக முதியவர்களை குறிவைத்து நட்பான முறையில் அணுகி தமது கைவரிசையை காட்ட ஆரம்பிக்கின்றனர். இதற்கிடையில், **கவனச்சிதறல்** மூலம் அவர்கள் கைப்பைகள், ஜாக்கெட் பாக்கெட்டுகள் அல்லது முதுகுப்பைகளில் இருந்து **மதிப்புமிக்க பொருட்கள் அல்லது பணப்பைகளை திருடுகிறார்கள்.

பொது போக்குவரத்து, ரயில் நிலையங்கள், ஷாப்பிங் மையங்கள் மற்றும் பாதசாரி மண்டலங்களில் இவ்வாறான குற்றங்கள் அதிகளவில் இடம்பெறுவதாக போலீசார் எச்சரிக்கின்றனர். குற்றவாளிகள் கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு விரைவாகவும், கண்டுபிடிக்கப்படாமலும் தப்பித்துக்கொள்ளுகிறார்கள்.
### தடுப்பு மிக முக்கியம் – காவல்துறை நடத்தை குறிப்புகள்
அதிகரித்து வரும் திருட்டுச் சம்பவங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, துர்காவ் கன்டோனல் காவல்துறை ஏற்கனவே **தீவிரப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை** தொடங்கியுள்ளது மற்றும் முக்கியமான இடங்களில் சிவில் போலீஸ் பிரசன்னத்தை ஏற்படுத்தியுள்ளது. *சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது சம்பவங்களைக் கவனிக்கும் எவரும்** உடனடியாக துர்காவ் கன்டோனல் காவல்துறையினரை **117** என்ற அவசர எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என போலீசார் அறிவுறுத்துகின்றனர்: