Appenzell Ausserrhoden இல் துப்பாக்கிசூடு : விரைந்து வந்த போலீசாருக்கு கிடைத்த ஏமாற்றம்
சனிக்கிழமை மாலை சுமார் 6:30 மணியளவில், அப்பன்செல் மாகாணத்திலுள்ள ஹெரிசாவில் உள்ள காவல்துறையினருக்கு, Gossauerstrasse இல் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாகத் தகவல் கிடைத்தது. பல அவசர சேவைகள் உடனடியாக அனுப்பப்பட்டன. ஆனால், அவர்கள் வந்தபோது, அங்கு யாரும் இல்லை.
சோதனையின் போது, போலீசார் தோட்டா பெட்டிகளைக் கண்டுபிடித்தனர். அவை வெற்று துப்பாக்கியால் சுடும் வெற்று தோட்டாக்கள் என்பது தெரியவந்தது. இந்த வகை ஆயுதம் உண்மையான கைத்துப்பாக்கிகளைப் போலவே தோற்றமளிக்கிறது, ஆனால் சுடுவதில்லை. அவை சத்தமாக ஒலிக்கின்றன, ஆனால் பொதுவாக பாதிப்பில்லாதவை.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும், பொருள் சேதமும் ஏற்படவில்லை. Appenzell Ausserrhoden கன்டோனல் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் நகச்சுவைக்காக மேற்கொள்ளப்பட்டதா, ஆத்திரமூட்டலா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
பொறுப்பானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். மக்களுக்கும் கட்டிடங்களுக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்றாலும், காவல்துறை இதுபோன்ற சம்பவங்களை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது – ஏனென்றால் வெளியாட்களால் பெரும்பாலும் ஆயுதம் உண்மையானது என்பதை நம்பி பீதிக்கு உள்ளாகுவார்கள் எனவும் போலீசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
(c) Kapo Appenzell Ausserrhoden