ஆர்காவ் மாகணத்தில் டிராக்டர் ஓட்டிச்சென்ற 14 வயது சிறுவன் விபத்து
புதன்கிழமை, இரவு 8 மணிக்கு சற்று முன்பு, ஆர்காவ் மாகாணத்திலுள்ள (hagglingen) ஹாக்ளிங்கன் ல் ஒரு போக்குவரத்து விபத்து நடந்ததாக காவல்துறைக்கு ஒரு தகவல் கிடைத்தது .
14 வயது இளைஞன் ஒருவன் தனது டிராக்டரை கிராம மையத்தை நோக்கி ஓட்டிச் சென்றான், ஆரம்பக் கண்டுபிடிப்புகளின்படி, அருகிலுள்ள சரளைப் பகுதிக்கு வாகனத்தை செலுத்தினான்.

டிராக்டர் இரண்டு சரக்கு போக்குவரத்து டிரெய்லர்களுடன் மோதியதால், டிராக்டர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அப்பகுதியில் வசிக்கும் இளைஞன் காயமடைந்தார். இதனை தொடர்ந்து ஒரு ஆம்புலன்ஸ் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. டிராக்டர் மற்றும் பிற வாகனங்கள் பொருள் சேதத்தை சந்தித்தன.
விபத்துக்கான சரியான சூழ்நிலைகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. சுவிட்சர்லாந்தில், 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள், மணிக்கு 30 கிமீ வேகத்தில் விவசாய மற்றும் வனவியல் மோட்டார் வாகனங்களை ஓட்டுவதற்கு G வகை ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(c) Kapo AG