ஜெனீவாவில் பார்சல் குண்டு சம்பவம்: 61 வயது சுவிஸ் நபர் கைது
ஜெனீவா நகரில் நடந்த பார்சல் குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 61 வயது சுவிட்சர்லாந்து நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சுவிஸ் மத்திய காவல்துறை (Fedpol) மற்றும் கான்டன் காவல்துறை இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த கைது இடம்பெற்றது.
கடந்த 2024 ஆம் ஆண்டில் ஜெனீவா நகரின் பல பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் இந்த நபர் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் செயின்ட்-ஜீன் பகுதியில் ஒரு நபர் வீட்டின் வாசலில் குண்டு வெடித்ததில் காயமடைந்தார்.

நவம்பர் மாதத்தில் க்ராஞ்ச்-கானால் பகுதியில் ஒரு அஞ்சல் பெட்டியில் ஏற்பட்ட வெடிப்பில் 12 வயது சிறுமி கடுமையாக காயமடைந்தார். மேலும், ஏப்ரல் மாதம் பிளான்-லே-வோட் பகுதியில் 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட துப்பாக்கி போன்ற சாதனத்தால் ஒருவர் தாக்கப்பட்டார்.
ஜனவரி மாதம் ஜெனீவாவின் மைய பகுதியில் ஒரு தபால் குண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. கைதான நபர் வெடிகுண்டுகளை தயாரித்து வெடிக்க செய்ததாகவும், மிரட்டல் கடிதங்கள் மற்றும் பொருளாதார கோரிக்கைகள் கொண்ட கடிதங்களை அனுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.