ஷாஃப்ஹவுசனில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்..!!
நவம்பர் 15 முதல் 17, 2024 வரையிலான வார இறுதியில் ஷாஃப்ஹவுசன் கன்டோனில் பல்வேறு இடங்களில் நடந்த தொடர் திருட்டுகள் குறித்து ஷாஃப்ஹவுசன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Schaffhausen நகரில், Oberer Schulweg இல் உள்ள ஒரு விளையாட்டுக் குழு மற்றும் அருகிலுள்ள மதிய உணவு அறைக்குள் புகுந்த கொள்ளையர்கள், இரு இடங்களிலிருந்தும் பல நூறு பிராங்குகள் பணத்தைத் திருடிச் சென்றனர்.
Stokarbergstrasse இல் உள்ள ஒரு குடியிருப்பில், பூட்டப்படாத அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்த திருடர்கள், வெளியில் நிறுத்தப்பட்டிருந்த சாம்பல் நிற காரை திருடுவதற்கு முன், பணம் மற்றும் கார் சாவியை எடுத்துக் கொண்டனர்.

மேலும் ஒரு சம்பவமாக ஹல்லாவில், Oberwiesenstrasse இல் உள்ள ஒரு தளத்தில் இருந்து கட்டுமான உபகரணங்கள் திருடப்பட்டன. திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு இன்னும் தீர்மானிக்கப்படுகிறது. Opfertshofen இல் உள்ள Dorfstrasse இல் உள்ள ஒரு உணவகத்தில் மற்றொரு திருட்டு நடந்தது, அங்கு திருடர்கள் பலவந்தமாக பின் ஜன்னல் வழியாக நுழைந்து பல நூறு பிராங்குகளை கொள்ளையடித்தனர்.
இவ்வாறு பல திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் போலீசார் இது பற்றி விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான செயல்களை அவதானித்தால் 117 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலம் புகாரளிக்குமாறும், ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளைப் பாதுகாக்குமாறும் காவல்துறை கேட்டுக்கொள்கிறது. இந்த சம்பவங்கள் பற்றிய தகவல்களை அறிந்த சாட்சிகள் +41 52 624 24 24 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்னர்.