சூரிச்சில் ஹமாஸ் தாக்குதலில் பலியானவர்களுக்கு நினைவுகூறல் இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூற சூரிச்சில் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.
இஸ்ரேல் மீது இஸ்லாமியவாத ஹமாஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலின் ஆண்டு நினைவு நாளில், நூற்றுக்கணக்கான மக்கள் திங்கள்கிழமை மாலை சூரிச்சில் ஒரு நினைவேந்தல் நிகழ்வில் கூடினர்.
டெசினெர்பிளாட்ஸில் அவர்கள் மெழுகுவர்த்திகள் மற்றும் இஸ்ரேலிய கொடிகளுடன் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பணயக்கைதிகளை நினைவு கூர்ந்தனர்.
நினைவுகூறலின் இரண்டாம் பகுதி சூரிச் யூத சமூகத்தின் சமூக மையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் சூரிச் யூத சமூகத்தின் தலைவர் ஜாக் லாண்டே, தேசிய கவுன்சிலர் ஆல்ஃபிரட் ஹீர் (SVP) மற்றும் மாநில கவுன்சிலர் டேனியல் ஜோசிட்ச் (SP) ஆகியோரின் உரைகள் இடம்பெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வை சுவிட்சர்லாந்து-இஸ்ரேல் சங்கம், இஸ்ரேல்-வேர்க்ஸ் சுவிட்சர்லாந்து பணிக்குழு மற்றும் இஸ்ரேலிய சமூகங்களின் சுவிஸ் சங்கம் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.
அக்டோபர் 7, 2023 அன்று, ஹமாஸ் மற்றும் பிற தீவிரவாத குழுக்களின் பயங்கரவாதிகள் இஸ்ரேலில் 1,200 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றனர். இது காசா போருக்கு தூண்டுதலாக இருந்தது.
இதில், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார ஆணையத்தின்படி, இதுவரை 42,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், இதில் பல குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
zueritoday (c)