சுவிஸ் எல்லையில் அதிக அளவு கோகோயின் கடத்தியவர் கைது அரை கிலோவுக்கும் அதிகமான கோகோயின் போதைப்பொருளுடன் சுவிட்சர்லாந்திற்குள் எல்லையை கடக்க முயன்ற ஒருவரை இத்தாலிய பொலிஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.
இத்தாலிய செய்தி நிறுவனம் ஒன்றின் அறிக்கையின் படி குறித்த நபர் ஏற்கனவே பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர் என தெரிவித்துள்ளது.
அந்த நபர் 548.75 கிராம் கொக்கெய்ன் மற்றும் 350 யூரோ பணத்தை ஓட்டுநர் இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்தார் என்று இத்தாலிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

போதைப்பொருள் மோப்ப நாய் மூலம் கோகோயின் கைப்பற்றப்பட்டது. 24 வயதான இளைஞரின் குடியிருப்பில் சிறிய அளவிலான கொக்கெய்ன் அடங்கிய மற்றொரு பொதி கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த நபரின் கண்காணிப்பின் மூலம் இந்த கைது சாத்தியமாகியுள்ளதாக அறிக்கை தொடர்கிறது.
போதைப்பொருள் கடத்தல், சொத்துக் குற்றங்கள் மற்றும் ஆயுதங்கள் வைத்திருப்பது போன்ற பல குற்றச்சாட்டுகள் மற்றும் குறைந்த வருமானம் இருந்தபோதிலும் இத்தாலிக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையே அடிக்கடி புதிய சொகுசு கார்களில் பயணித்ததால், இத்தாலிய காவல்துறை சில காலமாக அந்த நபரைரை கண்காணித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.