இரவு நேர ரயில் நெட்வொர்க்கைத் அறிமுகப்படுத்த சுவிட்சர்லாந்து திட்டம் சுவிட்சர்லாந்தின் தேசிய இரயில் நிறுவனமான SBB, 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் புதிய இரவு நேர ரயில் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த புதிய சேவை வார இறுதி நாட்களில் செயல்படும்.
நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு இடையே வசதியான பயணத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இரவு நேர ரயில்கள் சூரிச், பாஸல் மற்றும் ஜெனீவா ஏரி பகுதி போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும். இந்த திட்டத்தில் சூரிச் மற்றும் ஜெனீவா இடையே இயங்கும் இன்டர்சிட்டி இரவு ரயில்கள் அடங்கும்.
இந்த ரயில் சேவைகளுக்கு “ஓல்டன்” மத்திய பரிமாற்ற மையமாக செயல்படுகிறது. ஓல்டனில் இருந்து, பயணிகள் சுவிட்சர்லாந்து முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு இணைப்புகளை அணுக முடியும்.

கூடுதலாக, இரவு ரயில் சேவையானது சூரிச், பாஸல் மற்றும் ஜெனீவா போன்ற முக்கிய விமான நிலையங்களுக்கு விரிவாக்கப்பட்ட இணைப்புகளை உள்ளடக்கும். அதாவது, பயணிகள் இந்த விமான நிலையங்களை அடைய இரவு நேர ரயில்களைப் பயன்படுத்த முடியும், இது அதிகாலை அல்லது இரவு நேர விமானங்களைப் பிடிப்பதை எளிதாக்குகிறது.
இரவு நேர ரயில் நெட்வொர்க்குடன் SBB இன் குறிக்கோளாக, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது மற்றும் சுவிட்சர்லாந்திற்குள் நீண்ட தூரப் பயணத்திற்கு மிகவும் நிலையான விருப்பத்தை வழங்குவவதே நோக்கம் என குறிப்பிடுகிறது.
இந்த இரவு நேர ரயில்களின் அறிமுகமானது, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பயண விருப்பங்களுக்கு மக்களை மாற்றுவதற்கும் ஒரு பரந்த உத்தியின் ஒரு பகுதியாகும்.