சுவிஸ் நிறுவனங்கள் ஐரோப்பிய AI ஒப்பந்தத்தில் கைச்சாத்து செயற்கை நுண்ணறிவை (AI) பொறுப்புடன் பயன்படுத்துவதற்கான முக்கிய கொள்கைகளைப் பின்பற்ற 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தன்னார்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த நிறுவனங்களில் Logitech போன்ற கம்ப்யூட்டர் accessories தயாரிப்பதில் பெயர் பெற்ற சுவிஸ் நிறுவனங்களும், மற்றும் “அடெக்கோ” பணியாளர் நிறுவனமும் அடங்கும். இந்த வணிகங்கள் வரவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் AI சட்டத்தின் சில பகுதிகளைப் பின்பற்ற உறுதிபூண்டுள்ளன. அது இன்னும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை.
புதிய AI விதிமுறைகளுக்குத் தயாராவதற்கு மூன்று முக்கியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிறுவனங்களை ஒப்பந்தம் கேட்டுக்கொள்கிறது. முதலில், அவர்கள் AI ஐ பொறுப்புடன் பயன்படுத்துவதற்கான உள் உத்தியை உருவாக்க வேண்டும். இரண்டாவதாக, அவர்கள் பயன்படுத்தும் எந்த AI அமைப்புகளையும் புதிய சட்டத்தின் கீழ் “அதிக ஆபத்து” என்று கருதலாம்.

அதாவது ஹெல்த்கேர் அல்லது ஃபைனான்ஸ் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் AI முறைகளை சுட்டிக்காட்டுகின்றது. மூன்றாவதாக, AI மற்றும் அதன் தாக்கம் பற்றிய தங்கள் ஊழியர்களின் புரிதலை அவர்கள் மேம்படுத்த வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய AI சட்டம் ஆகஸ்ட் 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்தது, ஆனால் நாடுகள் 2026 வரை அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், இந்த விதிமுறைகளை அது உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போது, சுவிட்சர்லாந்தில் AIக்கான குறிப்பிட்ட சட்டம் இல்லை, ஆனால் அரசாங்கம் அதைச் செயல்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.