இலங்கை இராணுவம் குறித்து விசாரணை நடத்த சுவிட்சர்லாந்து கோரிக்கை
இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த ஐ.நா.விடம் சுவிட்சர்லாந்து கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது இராணுவத்தினர் மேற்கொள்ளும் தன்னிச்சையான கைதுகள், துஷ்பிரயோகங்கள் மற்றும் சித்திரவதைகளுக்கான ஆதாரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சுவிட்சர்லாந்து ஐ.நா-விடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று (செப்.09) ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், பொறுப்பாளிகள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும் என சுவிட்சர்லாந்து அழைப்பு விடுத்து.

இலங்கையில் புதிய அடக்குமுறைச் சட்டங்களை ஏற்றுக்கொள்வது அல்லது முன்மொழிவது குறித்து சுவிட்சர்லாந்து கவலை அடைந்துள்ளதாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா.விற்கான சுவிஸ் தூதர் Jürg Lauber கூறியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் டர்க்கைப் போலவே, அவருக்கு முன்பும், அவர் குறிப்பாக இணைய பாதுகாப்பு மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு (என்.ஜி.ஓ) எதிரான சட்டங்களைக் கண்டித்தார்.
குறிப்பாக, ஓன்லைன் பாதுகாப்பு மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் NGO-க்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கும் சட்டங்களை இலங்கை அறிமுகப்படுத்துவதால் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளதாக அவர் கூறினார்.

ஏற்கனவே, ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் துர்க், இந்தச் சட்டங்கள் அடிப்படை உரிமைகளை கெடுக்கும் வகையில் இருக்கக்கூடும் எனக் கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும், தீவிரவாத தடுப்பு சட்டம் (Prevention of Terrorism Act) இலங்கையில் தக்கவைக்கப்பட்டிருப்பது பற்றி சுவிட்சர்லாந்து கவலையை வெளிப்படுத்தியது.

இந்த சட்டத்தை அடிப்படை உரிமைகளை ஒடுக்க, அரசாங்கம் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
இவ்வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஐ.நா ஆணையர் துர்க், சிவில் உரிமைகளை உறுதியாகப் பாதுகாக்க இலங்கை அதிகாரிகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.