வலைஸ் கன்டோனில் போலி போலீஸ் அதிகாரிகள் : எச்சரிக்கை செய்தி போலி வங்கியாளர்கள் அல்லது காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மோசடி வழக்குகள் குறித்து வலைஸ் கன்டோனல் போலீசார் மூன்றாவது முறையாக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜூலை 3 மற்றும் 12, 2024 அன்று முதல்இ மோசடி வழக்குகள் அதிகரித்து செல்வதாக குறிப்பிடப்படுகிறது.

ஜூலை 3, 2024 மற்றும் ஜூலை 12, 2024 அன்று போலி மோசடிக்காரர்கள் தொடர்பாக எங்கள் ஊடக வெளியீடுகள் இருந்தபோதிலும், வயதானவர்களின் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. அவர்கள் எளிதில் இவ்வகையான போலிகளை நம்பி ஏமாந்துவிடுவதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
எமது சுவிஸ் தமிழ் டிவி ஊடகமும் இதுதொடர்பாக பலமுறைய சுட்டிக்காட்டியிருந்தது. மோசடிக்காரர்கள், வங்கி ஊழியர் அல்லது காவல்துறை அதிகாரி ஒருவர் உங்களை தொலைபேசியில் தொடர்புகொள்வார்கள்.

உங்கள் வங்கி அட்டையில் ஏதோ தவறு இருப்பதாகவோ அல்லது உங்கள் கணக்கில் மோசடி நடமாட்டங்கள் ஏற்பட்டதாகவோ அவர்கள் கூறுகிறார். மோசடி செய்பவர் அல்லது அவரது கூட்டாளி பாதிக்கப்பட்ட வங்கி அட்டைகளை சேகரிக்க உங்கள் வீட்டிற்குச் வருவதாக குறிப்பிடுவார்.
பெரும்பாலும் வங்கி அட்டைகளை பாதியாக வெட்டி அஞ்சல் பெட்டியில் வைக்கும்படியும் கேட்கப்படுவீர்கள். அவை பணம் மற்றும் உங்கள் மதிப்புமிக்க பொருட்களை குறிவைத்து நடாத்தப்படும் போலியான ஏமாற்றுவேலை என்பது குறிப்பிடத்துக்கது..
துரதிர்ஷ்டவசமாக, இவ்வாறான வழக்குகள் அதிகரித்து வருவதை வலைஸ் கன்டோனல் போலீசார் கவனித்துள்ளனர். இதனால் மக்களை இது தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.