எல்லைகளை பாதுகாக்க 300 மில்லியன் பிராங்குகள் செலவழிக்கும் சுவிஸ் ஷெங்கன் எல்லைகளை பாதுகாக்க சுவிட்சர்லாந்து 300 மில்லியன் பிராங்குகளை செலவிட உள்ளது.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கும் இந்த நடவடிக்கையின் நோக்கம், “ஷெங்கன் பகுதியின் வெளிப்புற எல்லைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதாகும்.
(c) AFP
எனவே, எல்லைக் கட்டுப்பாடுகளின் செயல்திறனை அதிகரிப்பதோடு சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை என்று பெடரல் கவுன்சில் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இல்லாவிட்டாலும்இ அது ஷெங்கன் மண்டலத்தைச் சேர்ந்ததுஇ மேலும் 300 மில்லியன் பிராங்க் பங்களிப்பு நியாயமானது என கருதுவதாக தெரிவித்துள்ளது.