சூரிச்சில் மின்சார பைக் ஓட்டுனர்களிடம் திடீர் சோதனை நேற்று புதன்கிழமை பிற்பகல், சூரிச் கன்டோனல் காவல்துறை, பல்வேறு முனிசிபல் போலீஸ் படைகளுடன் இணைந்து, சூரிச் மாகாணத்தின் பல்வேறு இடங்களில் மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களஎலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் அவற்றின் ஓட்டுநர்கள் மீது சோதனைகளை மேற்கொண்டது.
இந்த சோதனையின் நோக்கமானது, பொருந்தக்கூடிய போக்குவரத்து விதிகளை அறியச் செய்வதும், தேவைப்படும் இடங்களில் அவற்றைச் செயல்படுத்துவதும், அதன் மூலம் சாலைப் பயனாளர்கள் அனைவருக்கும் சாலைப் பாதுகாப்பை அதிகரிப்பதும் என கன்டோனல் போலீசார் தெரிவித்தனர்.
கன்டோனல் போலீசார் 30 பேருடைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், பிற இலத்திரனியல் நவநாகரீக வாகனங்களை சோதனை செய்தனர் . அவற்றில் ஓட்டுநர் உரிமம் இல்லாத பதினொரு பேர் அடையாளம் காணப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். மிக வேகமாக ஓட்டியதற்காக அல்லது தொழில்நுட்பக் குறைபாடுள்ள வாகனங்கள் அல்லது பிற போக்குவரத்து விதிமீறல்களுக்காக அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டது.