சுவிஸில் கருணை கொலையாளிகளின் எண்னிக்கை அதிகரிப்பு எக்சிட் ஜெர்மன் சுவிட்சர்லாந்து என்ற அமைப்பின் ஊடாக உயிரை தாமாகே மாய்த்துக்கொள்ள முன்வருபவரின் எண்ணிக்கை அதிரித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, அதிகமான மக்கள் கருணைகொலையைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
2023ல் மட்டும் 19,679 பேர் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு, 1,252 உறுப்பினர்கள் சுயமாக தீர்மானிக்கப்பட்ட மற்றும் துணையுடன் இறக்க முடிவு செய்தனர்.
அதாவது 2022ல் இருந்ததை விட சுமார் 11 சதவீதம் பேர் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் எக்சிட் அமைப்பை பயன்படுத்திக் கொண்டனர்.
முதுமையடைந்து வரும் சமுதாயம், கடுமையான பலவீனமான நோய்கள் அல்லது இயலாமைகளை கொண்டுள்ளவர்கள்; இவ்வாறான மரணங்களை தேர்வு செய்வதாக குறிப்பிடுகிறார்கள்.
இவ்வாறு வந்தவர்களின் வயது பெண்களுக்கு சராசரியாக 80 ஆண்டுகளாகும் மற்றும் ஆண்களுக்கு 79 ஆண்டுகளாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் இறப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கேன்சர் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.