ஆர்காவ் கன்டோனில் இடம்பெற்ற விபத்தில் 2 பேர் பலி.!! ஆர்காவ் கான்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆர்காவ் கான்டனின் Rottenschwil நகரில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் வந்த ட்ரக் வண்டியொன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

என்ன காரணத்தினால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
வாகன விபத்து காரணமாக நீண்ட நேரம் பாதை மூடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Quelle: Kantonspolizei Aargau
Bildquelle: Kantonspolizei Aargau