சூரிச் விமான நிலையத்தில் 750 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: பலர் கைது
சூரிச் விமான நிலையம் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான போதைப்பொருள் பறிமுதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. சூரிச் கன்டோன் காவல்துறையும், கூட்டாட்சி சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அலுவலகமும் (BAZG) இணைந்து, இந்த காலாண்டில் 750 கிலோகிராமுக்கும் மேற்பட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்து, பலரை கைது செய்துள்ளனர்.
பயணிகள் மீதான சோதனைகளில், 29 சம்பவங்களில் சுமார் 3 கிலோ கோகைன், 650 கிலோவுக்கு மேல் மரிஜுவானா, 6 கிலோ ஹெராயின் மற்றும் 90 கிலோவுக்கு மேல் காட் (Khat) பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் 21 முதல் 58 வயது வரையிலான 7 பெண்கள் மற்றும் 22 ஆண்கள் கைது செய்யப்பட்டனர். பத்து பேர் சூரிச் விமான நிலையத்தை இடைத்தங்கல் விமான நிலையமாகப் பயன்படுத்தியவர்கள், 19 பேர் இதன் வழியாக சுவிட்சர்லாந்திற்கு வந்தவர்கள். கைது செய்யப்பட்டவர்கள் பிரேசில், ஸ்பெயின், இஸ்ரேல், அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, பிரிட்டன், பல்கேரியா, ஸ்வீடன், ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து, மெக்ஸிகோ மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
போதைப்பொருட்கள் மெக்ஸிகோ, இஸ்ரேல், பிரேசில், தாய்லாந்து, கம்போடியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. கைது செய்யப்பட்ட அனைவரும், சூரிச் கன்டோன் காவல்துறையின் விசாரணைக்குப் பின், சம்பந்தப்பட்ட மாநில வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டனர்.
@KeystoneSDA