பேர்ன் மாகாணத்தில் 73 வயது ஸ்பெயின் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு
பேர்ன் மாகாணத்தில் புதன்கிழமை பிற்பகல், பெர்னர் ஓபர்லேண்டில் உள்ள (Innertkirchen) இன்னர்ட்கிர்ச்சென் பகுதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 73 வயது ஸ்பெயின் சுற்றுலாப் பயணியான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். உடனடியாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், அவர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
பெர்ன் கன்டோன் காவல்துறையின் ஆரம்ப தகவல்களின்படி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் முந்திச் செல்ல முயன்றபோது தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால், அவர் சாலையோரத் தடுப்பு மீது மோதி, தடுமாறி, எதிரே வந்த காருடன் மோதினார்.

இறந்தவர் ஸ்பெயினைச் சேர்ந்த 73 வயது ஆண் என காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் இன்னர்ட்கிர்ச்செனில் இருந்து மெய்ரிங்கன் நோக்கி ஒரு குழுவுடன் பயணித்துக் கொண்டிருந்தார். விபத்து குறித்து கன்டோன் காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
@Kapo BE