கார் திருடர்களை கைது செய்யும் முயற்சியில் 3 போலீசார் காயம் : ஆர்காவ் இல் சம்பவம்
அர்காவ் கன்டோனிலுள்ள ஆராவ் நகரத்தில், புதன்கிழமை அதிகாலை ஒரு காரில் புகுந்த சந்தேகத்திற்குரிய இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025 ஜூலை 9ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை சுமார் 1:45 மணியளவில், ஆராவ் பகுதியில் தன் வீட்டு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் இருவர் நுழைந்து எதையோ தேடுவதை பார்த்த ஒருவர் உடனடியாக அவர்களை விசாரிக்க முனைந்தார். அதனைத் தொடர்ந்து இருவரும் தப்பிச்சென்றனர்.
உடனடியாக அவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். கன்டோன் போலீசும், ஆராவ் நகர போலீசும் சேர்ந்து பல்வேறு படைகளுடன் விரைந்து வந்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட தேடலில், 26 வயதான இத்தாலிய நபர் ஒருவரை போலீசார் பிடித்தனர்.

இந்நிலையில் இத்தாலிய நபர், கைது செய்யப்படும் போதே கடுமையாக எதிர்த்துப் போராடியதால், அவர் மற்றும் மூன்று போலீசாரும் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவருக்கு மருத்துவசிகிச்சை வழங்கப்பட்டது.
இரண்டாவது நபர் தற்போது வரை பிடிக்கப்படவில்லை. அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை தற்போது விசாரணைக்காக தற்காலிக காவலில் வைத்துள்ளனர்.
பொதுமக்கள் இவர்களைப் பற்றிய எந்தவொரு தகவலையும் உடனடியாக போலீசாருக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். குறிப்பாக, இரவில் வாகனங்களை பாதுகாப்பான முறையில் பூட்டி வைக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
@Kapo AG