வீதியை கடக்கு முற்பட்ட 7 வயது சிறுவன் மீது கார் மோதியது.! Appenzell Ausserrhoden கன்டோனில் ஹெய்டன் பகுதியில் புதன்கிழமை 7 வயது சிறுவன் மீது கார் மோதியதில் லேசான காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
புதன்கிழமை காலை, 8 மணிக்கு சற்று முன், 51 வயதுடைய ஓட்டுநர் ஒருவர் தனது காரை Obereggerstrasse இல் ஹெய்டன் நோக்கி கடும் பனியில் ஓட்டிச் சென்றார். ஓட்டுநர் எதிர்பாராத விதமாக, ஒரு சிறுவன் தெருவின் இடது பக்கத்திலிருந்து தெருவை கடக்க ஓடியசிறுவன் மீது மோதியுள்ளார்.

பிரேக் போட்டாலும், மோதலை தவிர்க்க முடியவில்லை. கார் மோதியதில் 7 வயது சிறுவன் சிறு காயங்களுக்கு உள்ளானான். அவசர சேவை மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.