விபத்தில் சிக்கிய கார் ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி.!! ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தூன் பகுதியில் உள்ள ஆரேயில் ஒரு ஓட்டுநர் சுயவிபத்தில் சிக்கியுள்ளார். வீதியை உடைத்துக்கொண்டு அவரது; கார் பல மீற்றர்கள் ஆற்றில் வீழ்ந்து மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5:50 அளவில் விபத்து பற்றிய அறிக்கை கிடைத்ததாக பெர்ன் கன்டோனல் போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து எப்படி நடந்தது என்பது தொடர்பாக போலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.
விரிவான மீட்புப் பணியின் காரணமாகஇ விபத்து நடந்த பகுதி பல மணி நேரம் மூடப்பட்டது. போலீஸ்இ சிறப்பு சேவைகள்இ ஒரு ஆம்புலன்ஸ் குழுஇ பேர்ன் பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவ நிறுவனம் மற்றும் தூன் தீயணைப்புத் துறையின் நிபுணர்கள் ஆகியோரும் சம்பவ இடத்தில் பணிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.