விண்டர்தூரில் 300 வீடுகளுக்கு மின்சாரம் தடை வின்டர்தூர் – ஓபர்சீன் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 300 வீடுகளில் தற்காலிகமாக மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
மின்கம்பியில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு மின்மாற்றிகள் செயழிழந்ததாகவும் அதன் காரணமாகவே மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் வின்டர்தூர் நகராட்சி அறிவித்தது.

சம்பவம் சுமார் 11:46 மணியளவில் நிகழ்ந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலமை பகல் 12.40 மணி வரை நீடித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில வீடுகளுக்கு முதல் 15 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டதாக நகராட்சி பயன்பாடுகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.