வாட் கன்டோனில் இடம்பெற்ற கோரவிபத்து : ஒருவர் பலி..!! சுவிட்சர்லாந்தின் வாட் கன்டோனில் இடம்பெற்ற விபத்தில் கோரவிபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
வாட் கன்டோனின் அவென்சஸ் பகுதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு உயிரிழந்தவர் 51 வயதான ஜெர்மனிய பிரஜை எனவும் தெரியவந்துள்:ளது.
மேலும் குறித்த விபத்தில் 39 வயதான ஜெர்மனிய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் மோதியதினாலையே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பின்னர் 33 வயதான ட்ரக்கின் ஓட்டுனரான போலந்து குடிமகன், கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்து கடந்த திங்கட்கிழமையன்று மதியம் 1:25 மணியளவில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் குற்றவியல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அறிக்கையின் ஆதாரம்: KAPO VD