வலைஸ் கன்டோனில் நேற்று திங்கட்கிழமை கடை ஒன்று உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
திங்கள்கிழமை இரவு (Crans-Montana) க்ரான்ஸ்-மொன்டானா இல் உள்ள கடையில் இருவர் புகுந்தனர். பல பல்லாயிரக்கணக்கான பிராங்குகள் மதிப்பிடப்பட்ட இருபது கடிகாரங்களை அவர்கள் திருடினர்.
சில மணிநேரங்களுக்குப் பிறகு, போலீசார் அவர்களை (Veysonnaz) வெய்சோனாஸ்ஸில் வைத்து கைது செய்தனர்.
வலைஸ்
திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு முன்னதாக சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியதில், இருவரின் வாடகை குடியிருப்பில் திருடப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் 35 மற்றும் 50 வயதுடைய இரண்டு ரோமானியர்கள் என தெரியவந்துள்ளது.. அவர்கள் விசாரிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். அரசு வழக்கறிஞர் அலுவலகம் தற்போது விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.