மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சூரிச்சில் தீ வைக்கப்பட்ட கார்
செவ்வாய்க்கிழமை மாலை, சூரிசின் மாவட்டம் 9 இல் ஒரு வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இது ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது பற்றி சூரிச் நகர போலீசார் தெரிவிக்கையில், இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காருக்கு தீ வைத்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இருவரும் இருண்ட உடை மற்றும் கருப்புத் தலைக்கவசம் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு பணிக்காக, மீட்பு சேவையான «Schutz & Rettung Zürich»-இன் தொழில்முறை தீயணைப்புப் பிரிவு சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டது. தீ அணைக்கப்பட்டு போதிலும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது. போலீசார் குற்றவாளிகளை நோக்கி தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருவதோடு குறிப்பிட்ட சந்தேகநபர்களை நேரில் பார்த்தவர்களை சாட்சியம் அளிக்க முன்வருமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
© Stadtpolizei Zürich