சுவிட்சர்லாந்தில் மேகமூட்டமான வானம். சகாரா தூசியால் மஞ்சள் நிறமாகும் சுவிட்சர்லாந்து!! சனிக்கிழமையன்று சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸின் வடக்கே வானத்தைப் பார்த்த எவராலும் சூரியனைக் காண முடியவில்லை.
இதற்குக் காரணம் காற்றில் இருந்த சஹாரா தூசி. நாட்டிலுள்ள 180,000 டன் சகாரா தூசி மோசமான காற்றின் தரம் மற்றும் மேகமூட்டமான வானத்திற்கு வழிவகுத்தது என தெரிவிக்கப்படுகிறது. இவ்வகையான தூசி பாதிப்புகள் முன்னரும் ஏற்பட்டுள்ளன.
ஆனால் இம்முறை அதை விட இரண்டுமடங்கு அதிகமாக ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வானிலை ஆய்வாளரின் கணக்கீடுகளின்படி, இது சுமார் 10,000 லாரிகளை நிரப்ப முடியும் என தெரிவிக்கிறார்.
சஹாரா தூசி காற்றில் இருந்தால், அது சூரிய ஒளியில் சிறிது பிரதிபலித்து வானம் மஞ்சள் நிறமாக மாறுகிறது. இதனை சுவிட்சர்லாந்தில் உள்ள யாரும் அவதானித்திருப்பார்கள்.
குறுகிய கால இந்த சஹாரா தூசி பெரும்பாலான மக்களின் ஆரோக்கியத்தில் ஒரு சிறிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.