போதைப்பொருள் குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 41 வயதான சுவிஸ் நபரை இத்தாலிய பொலிஸார் வெரோனாவில் கைது செய்துள்ளனர்.
அந்த நபருக்கு ஏழு ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், சிறையில் அடைக்கப்பட்ட நன்னடத்தை என்ற புதிய நிபந்தனையை அடுத்து அவர் தலைமறைவாயிருந்தார்.
புனரமைக்கப்பட்ட கட்டிடத்தின் கொதிகலன் அறையில் அவர் மறைந்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அறிக்கைகளின்படி, அவர் அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கொதிகலன் அறைக்கு சென்று ஒளிந்துள்ளார்.

புணரமைக்கப்படும் அந்த கட்டிடத்துக்குள் பூட்டை உடைந்து அவர் உள்நுழைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
அவரை கைது செய்த போது, அவரிடம் இருந்த திருட்டு பொருட்கள் மற்றும் போதைப் பொருள்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
இப்போது 41 வயதான அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.