பாசலில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் அக்டோபர் 5, சனிக்கிழமையன்று பாசலில் ஒரு பெரிய பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சுவிஸ்-பாலஸ்தீன சங்கம் மற்றும் “Unibas4Palestine” போன்ற குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு சுவிட்சர்லாந்து முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதியம் 2:00 மணிக்கு நடைபயணம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (De-Wette-Park) டி-வெட்டே பூங்காவில், வெட்ஸ்டீன் பாலத்தைக் கடந்து, காசர்னென்பிளாட்ஸில் ஆர்ப்பார்ட்ட பேரணி முடிவடையும்.

பிற்பகல் 2.00 மற்றும் மாலை 5:00 மணிக்குள் இந்த பாதையில் போக்குவரத்து இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக போலீசார் எச்சரித்துள்ளனர். மற்றும் மாலை 5:00
கடந்த ஆண்டு, பாதுகாப்புக் காரணங்களுக்காக பாசல் காவல்துறை ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டியிருந்தது. எனவே இந்த நிகழ்வுக்கு பாதுகாப்பு முதன்மையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.