பாசலில் காணாமல் போனவர் சொலுத்தூனில் சடலமாக மீட்பு
பாசல் பகுதியில் மார்ச் 14, 2025 வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போன ஒருவர், வெள்ளிக்கிழமை காலை சொலுத்தூர்ன் மாகாணத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அவரது மரணத்தில் வேறு ஒருவருக்கு தொடர்பு உள்ளதற்கான ஆதாரம் போலீசாரிடம் இல்லை. குற்றம் நடந்ததற்கான ஆதாரம் இல்லை. இறந்தவர் மற்றும் அவரது உறவினர்களின் தனியுரிமையை கருத்தில் கொண்டு, வழக்கு பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியிடப்படாது.
எனவும் போலீசார் அறிவித்துள்ளனர். இது பற்றிய மேலதிக விசாரணைகளை தற்போது போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.