நிலச்சரிவுகள் காரணமாக Valais அகதிகள் மையம் மூடப்பட்டது.!! Valais மாகாணத்தில் உள்ள Mayens-de-Chamoson இல் அகதிகளுக்கான விடுதியின் செயல்பாடு மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. நிலச்சரிவுகள் காரணமாக அதிகளவு நிலப்பரப்பு மூடப்பட்டுள்ளதாலும் விடுதில் வசிப்பவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை கட்டிடத்தின் நிலைகளை பகுப்பாய்வு செய்த பின்னர் முடிவு செய்யப்பட்டது என்று Valais மாகாணம் திங்களன்று அறிவித்தது. இந்தத் தங்குமிடத்தின் எதிர்காலம் குறித்து முடிவெடுப்பதற்கு முன் மேலும் தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த வீட்டில் இருந்த சுமார் 50 பேர் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். கன்டோனல் புகலிட அலுவலகம் புதிய தங்குமிட விருப்பங்களைத் தேடுகிறது.
வீட்டில் இணைக்கப்பட்டுள்ள உணவகமும் காலவரையின்றி செயல்படுவதை நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. (sda)