தற்கொலைக் காப்ஸ்யூல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் விடுவிப்பு Schaffhausen மாகாணத்தில் உள்ள அரசு வழக்கறிஞர் அலுவலகம் இன்று பிற்பகல் Sarco தற்கொலை காப்ஸ்யூல் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த ஒரு சந்தேக நபரை விடுவித்தது.
செப்டம்பர் 23, 2024 அன்று, ஷாஃப்ஹவுசென் மாகாணத்தில் உள்ள அரசு வழக்கறிஞர் அலுவலகம் தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் உதவுதல் போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்திருந்தது.
ஆரம்ப விசாரணை முடிவுகளின் அடிப்படையில், தற்கொலை இயந்திரத்தை பயன்படுத்தியவர் வேண்டுமென்றே கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் இருந்தது, பின்னர் அந்த சந்தேகம் ஷாஃப்ஹவுசென் மாகாணத்தின் நீதிமன்றத்தால் பல முறை உறுதிப்படுத்தப்பட்டது.

விசாரணையின் சமீபத்திய நிலையின் அடிப்படையில், தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் உதவுதல் ஆகிய குற்றங்கள் குறித்து இன்னும் பலத்த சந்தேகம் உள்ளது, ஆனால் வேண்டுமென்றே செய்யப்பட்ட கொலை அல்ல என்ற முடிவையே தற்போது நீதிமன்றம் கருதுகிறது.
ஜூரிச் மாகாணத்தின் தடயவியல் மருத்துவக் கழகத்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கை இருந்தாலும் (IRMZ ) இன்னும் அது கிடைக்கவில்லை. எனவே காவலில் இருந்த கடைசி நபரை அரசு வழக்கறிஞர் அலுவலகம் இன்று பிற்பகல் விடுவித்தது.
உத்தியோகபூர்வ மற்றும் புலனாய்வு இரகசியத்தின் அடிப்படையில், மேலதிக தகவல்கள் எதுவும் தற்போது வழங்கப்படவில்லை. தற்போதைக்கு அவர் குற்றமற்றவர் என கருதுவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.