ஜெனீவாவில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர் மையம் ஒன்றை மூடுமாறு உள்ளூர் சுவிஸ் மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மார்ச் மாதத்தில் திறக்கப்பட் இந்த புகலிடக் கோரிக்கையாளர் மையத்தில் தற்போது 10 பேர் மட்டுமே உள்ளனர் எனவும் இருப்பினும் அது 60 ஐ எட்டக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வலதுசாரிக் கட்சியும் மையத்தைச் சுற்றி பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றது.
இது பற்றி மேயர், Fabienne Monbaron குறிப்பிடுகையில், இது அந்த கட்சியின் எளிய தேர்தல் பிரச்சாரமாகவே தான் பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கலிடக் கோரிக்கையாளர் மையத்தில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாக எந்த அறிக்கையும் இல்லை எளவும் தெரிவித்துள்ளார்.