சூரிச்சில் மனைவியை கொலை செய்து தப்பியோடிய கணவர் கைது.!! ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், ஷாஃப்ஹவுசனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புற்கு வெளியே 29 வயதான பெண், கடுமையான காயங்களுடன் இறந்து கிடந்தார்.
அவளைக் காப்பாற்ற முயற்சித்த போதிலும், , துணை மருத்துவர்களால் சம்பவ இடத்திலேயே அவரது மரணத்தை மட்டுமே உறுதிப்படுத்த முடிந்தது.
தாக்குதல் நடத்தியவர் அந்த பெண்ணின் 47 வயது கணவர் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த நாளின் பிற்பகுதியில் அவர் சுங்க அதிகாரிகளால் Neuhausen எல்லைக் கடக்கும் இடத்தில் பிடிபட்டார்.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த அந்த நபர், தாக்குதல் நடத்தியதில் இருந்து தப்பியோடியிருந்தார். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையை தொடர்ந்து தற்போது கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட மற்றும் சந்தேக நபர் இருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை Bülach இல் உள்ள புகலிட மையத்தில் வசித்து வந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தியை போலீசார் தேடி வருவதுடன், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.(c) zueritoday