சூரிச்சில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு : ஒருவர் கைது.!! ஆகஸ்ட் 24, 2024 சனிக்கிழமை மாலை, ஜூரிச் நகரக் காவல் துறையினர் மாவட்டம் 6 இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர் 38 வயதான டொமினிகன் பெண் எனவும் வன்முறையின் காரணமாக அவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சூரிச்நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

பொலிசார் உடனடியாக விசாரணையை ஆரம்பித்தனர். இதன் போது 23 வயதான சுவிஸ் நபர் ஒருவர் திங்கள்கிழமை ஜூரிச் கன்டோனல் காவல் துறையினரால் மாவட்டம் 4ல் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் அரசு வக்கீல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டார். குற்றம் மற்றும் அதன் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
© Kantonspolizei Zürich