சூரிச்சில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திமுனையில் கொள்ளை புதன்கிழமை மாலை, சூரிச்சில் Winterthurebstrasse இல் உள்ள Migrol எரிவாயு நிலையம் நிலையத்தில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான சாட்சிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
நவம்பர் 13, 2024 அன்று, இரவு 8:30 மணிக்குப் பிறகு, முகமூடி அணிந்த நபர் ஒருவர் Migrol எரிவாயு நிலையக் கடைக்குள் நுழைந்தார். கையில் கத்தியை காட்டி ஊழியரை மிரட்டி பணம் கேட்டுள்ளார்.

பின்னர் அவர் பல நூறு பிராங்குகளுடன் ஸ்வாமெண்டிங்கர்பிளாட்ஸை நோக்கி கால்நடையாகத் தப்பிச் சென்றார். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
குற்றவாளி தொடர்பாக சில அங்க அடையாளங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அவர் சுமார் 170 செமீ உயரம் கொண்டவர் எனவும், 15 முதல் 30 வயது வரை இருக்கலாம், மெலிதான உடலமைப்பு மற்றும் கருமையான தோல் நிறம் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.