சுவிஸ் ஆற்றில் மிதக்கும் மனித கழிவுகள் – வெளியான எச்சரிக்கை கன்டோன் வலாய்ஸைச் சுற்றியுள்ள ஏரியில் மனித மலங்கள் கண்டறியப்பட்டுள்ளதால், அதில் நீந்த வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
புயலால் சேதமடைந்த வலாய்ஸ் கன்டோனில் உள்ள கழிவுநீர், ஆலைகளால் மாசு ஏற்பட வாய்ப்புள்ளதாக கடந்த வாரம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கனமழையால் ரோன் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

நிலைமையை நன்றாக மதிப்பிடும் வரை நீச்சல் அடிக்க வேண்டாம் என வலாய்ஸ் நுகர்வோர் விவகார சேவை எச்சரித்துள்ளது.
ஆனால் மாசு இன்னும் பாரிய அளவில் பரவல் அடையவில்லை, இருப்பினும் கன்டோன் வாட் குறித்த நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.