கார்களை உடைத்து கொள்ளை : போலீசாரிடமிருந்து தப்ப ஆற்றில் குதித்த நபர்
கடந்த புதன்கிழமை இரவு சுக் மாகாணத்தின், ஓபர்விலில் (Oberwil) பூட்டப்படாத கார்களில் இருந்து பல பொருட்களை ஒருவர் திருடியுள்ளார். அவர் ஒரு ஜாக்கெட், பணம், வங்கி அட்டைகள் மற்றும் ஹெட்ஃபோன்களை திருடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க, அவர் Zug ஏரியில் குதித்த போதும் சிறிது நேரம் கழித்து கைது செய்யப்பட்டார்.
அதிகாலை 3:15 மணியளவில், Tellenmattstrasse (டெல்லென்மாட்ஸ்ட்ராஸ்ஸில்) ஒரு நபர் பின்பகுதியில் பதுங்கியிருப்பதாகவும், வாகனங்கள் திறக்கப்படவில்லையா என்பதைச் சோதிப்பதாகவும் ஒரு குடிமகன் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். உடனே போலீசார் விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சிறிது நேரம் கழித்து, ஒரு போலீஸ் ரோந்து Artherstrasse (ஆர்தர்ஸ்ட்ராஸில்) உள்ள சந்தேகத்துடன்கூடிய நபரைக் கண்டுபிடித்தது. போலீசாரை கவனித்த அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவர் இருண்ட தெருக்களிலும், தோட்டச் சுவருக்குப் பின்னாலும், புதர்களிலும் ஒளிந்து கொண்டார். இறுதியாக, அவர் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக (Seeliken) சீலிகென் குளிர் ஏரி இல் குதித்தார்.

அவரை கரைக்கு திரும்புமாறு போலீசார் பலமுறை கூறினர். சிறிது நேரம் கழித்து, அந்த நபர் தப்பிக்கும் முயற்சியை கைவிட்டு தண்ணீரில் இருந்து வெளியேறினார். உடனே போலீசார் அவரை கைது செய்தனர். அவரது உடைமைகளை போலீசார் சோதனையிட்டபோது, பணம், வங்கி அட்டைகள், ஹெட்போன்கள், ஜாக்கெட் ஆகியவை கிடைத்தன. Zug நகரத்தில் உள்ள “Untere Roostmatt” மற்றும் “Hofmatt” பகுதிகளில் உள்ள வாகனங்களில் இருந்து இந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட நபர் மொராக்கோவைச் சேர்ந்த 33 வயதான புகலிடக் கோரிக்கையாளர் ஆவார், அவர் Zug மாகாணத்தில் பதிவு செய்யப்படவில்லை. அவர் இப்போது Zug மாகாணத்தில் உள்ள அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் முன் தனது செயல்களுக்கு பதிலளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Zuger Polizei