கன்டோன் எயடயளை சில் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஆறு வயதுச் சிறுமி மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வலை கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 5.54 மணியளவில் சிறுமி காணாமல் போனது குறித்து கன்டோனல் போலீஸ் நடவடிக்கை மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆறு வயது சிறுமி கடைசியாக குடும்ப கொண்டாட்டத்தில் பங்கேற்றதாகவும், அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை மாலை 5 மணி முதல் காணவில்லை எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்பிறகு, ஏராளமான மீட்புப் பணியாளர்களுடன் இணைந்து போலீஸ் படை தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதனையடுத்துஇ இரவு 9:20 மணியளவில் சுயஎழசைந பகுதிக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுமி மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதால உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் ஹெலிகாப்டர் மூலம் லொசானில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
குறித்த சம்பவத்தில் சுமார் 200 மேற்பட்ட பணியாளர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த சிறுமி இன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.