ஆஸ்திரியாவில் ஆயுதமுனையில் வங்கி கொள்ளை : சந்தேக நரப் சுவிஸ் நாட்டில் கைது!
ஆஸ்திரியாவின் டோர்ன்பிர்ன் நகரில் நடந்த ஆயுதம் ஏந்திய வங்கிக்கொள்ளை தொடர்பாக, சுவிஸ் நாட்டின் சென்ட்கேலன் நகரத்தில் 39 வயது வங்கிக் கொள்ளை சந்தேகநபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் சுவிஸில் வசிக்கும் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் திங்கட்கிழமை பிற்பகல் நேரத்தில் நடைபெற்றது. ஒரு முகமூடி அணிந்த நபர், கையில் துப்பாக்கியுடன் டோர்ன்பிர்னில் உள்ள ஸ்பார்காஸ்சே வங்கியின் மையக் கிளையில் நுழைந்து, பணம் தருமாறு வங்கி ஊழியரைக் மிரட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பின், அந்த நபர் பணத்துடன் ஒரு இ-ஸ்கூட்டரில் கிழக்கே தப்பியோடியுள்ளார். சம்பவத்துக்குப் பிறகு, அவசரமாக ஆஸ்திரியா முழுவதும் போலீசார் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர். ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறப்பு படையணிகளும் இதில் ஈடுபட்டன. ஏனெனில் அந்த நபர் பக்கத்திலுள்ள நாடுகளான ஜெர்மனி, லிக்டென்ஸ்டைன் மற்றும் சுவிஸ் வழியாக தப்பியிருக்க வாய்ப்புகள் இருந்தன.

அந்தமாதிரியான தகவல்களின் அடிப்படையில், சுவிஸ் நாட்டின் சென்ட்கேலன் பகுதியில் சந்தேகமுறையாக ஒருவர் பிடிபட்டார். அவரை போலீசார் சோதனை செய்தனர். அவரிடம் இருந்து சில முக்கியமான ஆதாரங்கள், கொள்ளையில் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்துள்ளதால், அவர் மீது உள்ள சந்தேகம் உறுதியாகியுள்ளது.
காவல்துறையினர் அவரை உடனடியாக கைது செய்தனர். தற்போது Austriaபோலீசாரும், சுவிஸ் அதிகாரிகளும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
@ Keystone-SDA Regional