Fribourg மாநிலத்தில் (Marly) மார்லியில் நேற்று மதியம், ஒரு ஓட்டுநர் மற்றும் இரண்டு பாதசாரிகள் விபத்துக்கு உள்ளான சம்பவம் பதிவாகியுள்ளது. விபத்தில் சிக்கியவர்கள் காயமடைந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் :-
பிப்ரவரி 1, 2023 புதன்கிழமை, மதியம் 1.45 மணியளவில், மார்லியில் ஒரு கடுமையான போக்குவரத்து விபத்து குறித்து கன்டோனல் போலீஸுக்குத் தெரிவிக்கப்பட்டது. தளத்தில், 73 வயதான டிரைவர் Fribourg கில் இருந்து Bourguillon திசையில் ஓட்டிச் சென்றதை போலீசார் கண்டறிந்தனர்.

மார்லியில் உள்ள Route de Fribourg கில், அவர்கள் பயணிக்கும் திசையில் இடமிருந்து வலமாக ஒரு பாதசாரி கடவைக் கடக்கும் இருவரின் மீதும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்படி விபத்தில் 78 வயது முதியவர் மற்றும் 74 வயது பெண் ஆகிய இரு பாதசாரிகளும் படுகாயம் அடைந்த நிலையில் இருவரும் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
குறித்த விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். மேலும் விபத்தின் காரணமாக Fribourg பாதை ஒரு மணி நேரம் மூடப்பட்டது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கன்டோன் போலீசார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.