ஆர்காவ் கன்டோன் ஸ்டில்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டது.
தீ பரவுபதை நேரில் பார்த்தவர்கள் பலர் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாக தீயணைப்புத் துறைக்கு எச்சரித்தனர்.
அவசர சேவைகள் பெரும் படையுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயணைப்பு படையினர் வருதற்கு முன்னர் தளத்தில் உள்ளே மாட்டியிருந்த பெண் அக்கம் பக்கத்தினர் உதவியுடன், காயங்களுடன் வெளியே தப்பிக்க முடிந்தது.
அபார்ட்மெண்ட்டின் ஒரு பகுதி முற்றாக எரிந்து நாசமானது. தீ வேகமாக அணைக்கப்பட்டதால் மேலும் பரவும் அபாயம் தவிர்க்கப்பட்டது.

தீ விபத்தில் காயமடைந்த 24 வயதுடைய பெண் ஒருவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. ஒரு மீட்பு ஹெலிகாப்டர் அவரை சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை அது வாழத் தகுதியற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய குடியிருப்பாளர்கள் தீ அணைக்கும் பணி முடிந்ததும் தங்கள் குடியிருப்புகளுக்கு திரும்ப முடிந்தது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தொழில்நுட்ப செயல்முறையில் கவனம் செலுத்தப்படுகிறது. ஆர்காவ் கன்டோனல் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.