சொலுத்தூர்ன் கன்டோனில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்..!! ஜனவரி 4, 2024 வியாழன் காலை சொலுத்தூர்ன் கன்டோனில் உள்ள கிரெஞ்சனுக்கு அருகிலுள்ள புல்வெளியில் ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சொலுத்தூர்ன் மாகாணத்தில் உள்ள காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர் அலுவலகம் உடனடியாக சூழ்நிலைகள் மற்றும் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
Titelbild: Kantonspolizei Solothurn
குறித்த சடலம் ஜனவரி 4, 2024 வியாழன் அன்று, சுமார் 8:30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பணியின் போது, பல்வேறு சிறப்பு சேவைகள் ஈடுபட்டிருந்த நிலையில்இ கிரென்சென் தீயணைப்புத் துறையின் உறுப்பினர்களால் தளம் சுற்றி வளைக்கப்பட்டு தடவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணம் தொடர்பாகவும் இது மூன்றாம் தரப்பால் நிகழ்த்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.