சுவிஸ் அரசு தெரிவித்த அதிர்ச்சி தகவல் – F-35 போர் விமானங்கள் திட்டம் விலை அதிகரிப்பு!
சுவிஸ் அரசு தற்போது வெளியிட்டுள்ள தகவலின் படி, அமெரிக்காவிடம் வாங்கப்படவுள்ள F-35 போர் விமானங்கள் திட்டத்தின் செலவு 1.35 பில்லியன் CHF வரை கூட அதிகரிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது முதல் கட்டத்தில் திட்டமிடப்பட்டிருந்த அளவைக் காட்டிலும் மிகவும் அதிகமாகும். ஆரம்பத்தில் இந்த ஒப்பந்தத்தின் மொத்தம் மதிப்பு சுமார் 6 பில்லியன் ஃப்ராங்க் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த தகவல் வெளியாகியவுடன், சுவிஸ் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சோசியல் ஜனநாயகக் கட்சி (SP) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர்கள் இந்த ஒப்பந்தம் பொய்கள் மற்றும் தவறான தகவல்களின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.

பசுமை கட்சி (Grüne Partei) இதை ஒரு நிதி சிக்கல் மட்டுமல்ல, ஒரு அபாயகரமான வெளிநாட்டு நம்பிக்கை என்றும் தெரிவிக்கிறது. அமெரிக்கா மீது பாதுகாப்புத் துறையில் இப்படி உருவாகுவது சுவிஸின் சுயாதீனத்துக்கு இடராகும் என அவர்கள் கூறுகின்றனர்.
இதற்கு மாறாக, மத்திய கட்சி (Die Mitte) சார்ந்த செனேட் உறுப்பினர் மரியனே பின்டர்-கெல்லர், “உலகத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைகள் மிகவும் பரபரப்பாக உள்ளன. அதனால் இந்த விமானங்கள் சுவிஸுக்கு தேவையானவை. விலை உயர்ந்தாலும், நாட்டின் பாதுகாப்பு முக்கியம்,” என வலியுறுத்துகிறார்.
பசுமை லிபரல்கள் (GLP) இந்த பிரச்சினையின் காரணம் விமானங்களில் இல்லை என்றும், ஒப்பந்தம் சரியாக எழுதப்படாததே உண்மையான காரணம் என்றும் கூறுகிறார்கள். அவர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து, விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்பதையும் வலியுறுத்துகின்றனர்.
இந்த விவகாரம் சுவிஸ் மக்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளளமை குறிப்பிடத்தக்கது.