ஆர்காவ் பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றில் கொள்ளை .!! ஆர்காவ் கன்டோனிலுள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றில் கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆர்காவ் கன்டோனல் போலீசார் அறிவித்துள்ளனர்.
புதன்கிழமை இரவு, ஜனவரி 15, 2025 அன்று, கன்டோன் ஆர்காவ் – Tägerig உள்ள (f)வோல்க் ஸ்டோரில் அலாரம் சிஸ்டம் நள்ளிரவுக்குப் பிறகு செயலிழந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கடைக்கு சென்றனர். அங்கு பிரதான நுழைவு வாயில் கதவு வலுக்கட்டாயமாக திறந்து கிடந்ததை கண்டனர்.
இருப்பினும், கொள்ளையர்கள் ஏற்கனவே தலைமறைவானதால், போலீசார் உடனடியாக தேடும் பணியில் ஈடுபட்டனர். சோதனையின் போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவரைக் கண்டுபிடித்தனர்.

அவர் சந்தேகப்படும்படியான திருட்டுப் பொருட்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது. 40 வயதான அந்த நபர் தற்காலிகமாக கைது செய்யப்பட்டார். கடையில் இருந்த CCTV வீடியோ காட்சிகள் மூலம், மற்றொரு திருடனும் அங்கு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இரண்டாவது சந்தேக நபரைத் தேடும் பணி தொடர்கிறது, ஆனால் அவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வழக்கை துப்பு துலக்க ஆர்காவ் கன்டோனல் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.