மின்னல் தாக்கி இரண்டு சுவிஸ் பிரஜைகள் பலி பிரான்ஸிற்கு அருகாமையில் அமைந்துள்ள கோர்சிக்கா தீவுகளில் சுவிட்சர்லாந்து பிரஜைகள் இருவரின் அது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
காட்டுப்பகுதி ஒன்றில் முகாமிட்டிருந்தபோது இந்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே மரணத்திற்கான சரியான காரணங்களை வெளியிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.