சுவிஸில் கட்டுமானத்துறையில் ஆளணி பற்றாக்குறை சுவிட்சர்லாந்தில் கட்டுமான தொழில்துறையில் ஆளணி வளப்பற்றாக்குறை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு இவ்வாறு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பில் கட்டுமான நிறுவனங்கள் கவனம் செலுத்த தவறியதனால் பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக ஊழியர்களின் வேதனம் தொடர்பில் நிறுவனங்கள் உரிய கவனம் செலுத்த தவறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கட்டுமானத்துறையின் வருமானம் அதிகரித்த போதிலும் அதன் நலன்கள் பணியாளர்களுக்கு கிடைக்கப்பெறுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் இந்த தொழில்துறையை விட்டு பலர் விலகிச் செல்வதாகவும் இதனால் ஆளணி வளப்பற்றாக்குறை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு அளவில் மேசன்களுக்கான பற்றாக்குறை 21 வீதமாக அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.